மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் நவம்பர் 1-ம் தேதி திறக்காது- தமிழக அரசு அரசாணை

மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் நவம்பர் 1-ம் தேதி திறக்கப்படாது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் நவம்பர் 1-ம் தேதி திறக்காது- தமிழக அரசு அரசாணை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன..

மேலும், நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நவம்பர் 1 முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் (LKG, UKG), அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம். காப்பாளர், சமையலர் உள்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது.

இந்நிலையில்  தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள்  திறக்கப்படாது எனவும்  தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை என்றும், 
மழலையர் எல். கே.ஜி யு. கே.ஜிக்கு பள்ளிகள் திறப்பு பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது..