சென்னையில் 72 நாட்களுக்கு பிறகு ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு...

சென்னையில் 72 நாட்களுக்கு பின்  தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது.  

சென்னையில் 72 நாட்களுக்கு பிறகு ஆயிரத்திற்கும்  கீழ் கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் கொரோனா தாக்கம் இரண்டாவது அலை கடந்த மாதம் உச்சத்தில் இருந்தபோது, தினசரி தொற்று பாதிப்பு, 35 ஆயிரமாக இருந்துவந்தது. இது படிப்படியாக குறைந்து, தற்போது, தினசரி தொற்று பாதிப்பு, 15 ஆயிரத்து, 108 ஆக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அதிக பட்சமாக, சென்னையில்,  தினசரி தொற்று பாதிப்பு ஏழாயிரமாக  பதிவாகி வந்த நிலையில், தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில், 72 நாட்களுக்கு பின் தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. சென்னையில் நேற்று, 989 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 23 புள்ளி26 சதவீதமாக இருந்த, தொற்று பாதிப்பு, தற்போது பல மடங்கு குறைந்து 4 புள்ளி 2 சதவீதமாக உள்ளது. இதில், குறைந்த பட்சமாக மணலியில் 209 நபர்களுக்கும், அதிக பட்சமாக, கோடம்பாக்கத்தில் 941 நபர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொற்று பாதிக்கப்பட்டு, 9ஆயிரத்து,838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.