செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகிறது 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதி?

பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை செப்டம்பர் 15-ம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகிறது 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதி?

தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் கடந்த 2019 டிசம்பர் மற்றும் 2020 ஜனவரி மாதங்களில ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகள் காரணமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம், தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இதனையடுத்து மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும், சட்டப்பேரவை கூட்டத்தொடரை காரணம் காட்டி 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் தொடக்கத்தில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முழு அறிவிப்பை ஆணையர் பழனிகுமார் விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.