தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பின் ஒன்பதாயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஒன்பதாயிரத்துக்கு கீழ் குறைந்ததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பின் ஒன்பதாயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு படிபடியாக  குறைந்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக 8 ஆயிரத்து 633 பேருக்கு மட்டுமே இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் நீண்ட நாட்களுக்கு பிறகு 1 லட்சத்திற்கு கீழ் குறைந்து, 89 ஆயிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 287 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னையில் அதிகபட்சமாக 48 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 19 ஆயித்திற்கும் அதிகமானோர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவையில் அதிகபட்சமாக ஆயிரத்து 89 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் தொற்றின் பாதிப்பு வெகுவாக குறைந்து 492 ஆக பதிவாகியுள்ளது.