மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு.. செங்கல்பட்டில் மினி மாரத்தான் போட்டி.

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு.. செங்கல்பட்டில் மினி மாரத்தான் போட்டி.

செங்கல்பட்டில் மஞ்சப்பை உபயோகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்டும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது., நெகிழியை ஒழிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் மீண்டும் மஞ்சப்பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாரத்தான் போட்டியை ஆட்சியர் ராகுல்நாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டு  மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ”மீண்டும் மஞ்சப்பை” பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகளை நடைபெற்றது.

நெகிழியை ஒழிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில்  மஞ்சப்பையை பொதுமக்கள் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வண்ணம்  விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி செங்கல்பட்டில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த மாரத்தான் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி செங்கல்பட்டு -
மதுராந்தகம் செல்லும் ஜி.எஸ்.டி சாலை வழியாக வேன்பாக்கத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக சென்று, அங்கிருந்து மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்து முடிந்தது. 

இதையும் படிக்க   } சீன பிளாஸ்டிக் லைட்டரை அரசு தடை செய்யுமா... ? அமைச்சர் தா.மோ அன்பரசன் பதில்!

இந்த மினி மாரத்தான் போட்டியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் என  500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசாக 3ஆயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசு 2ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசு ஆயிரம் ரூபாய் என ஊக்கப்பரிசுகள் மற்றும் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன. இயற்கையை குலைக்கும் நெகிழிகளை ஒழித்து மஞ்சப்பைகளை உபயோகிக்க  வலியுறுத்தி இந்த மினி மாரத்தான்  போட்டி நடைபெற்றது. நெகிழியை ஒழிக்க வலியுறுத்தும் இந்த முயற்சியை  ஏராளமானோர் நெகிழ்ச்சியுடன்  வரவேற்றனர்.

இதையும் படிக்க   }  தனியார் பள்ளிகள் சட்டம்...! தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்...!! சென்னை உயர் நீதிமன்றம்...!!