கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் மாசிமாத பிரதோஷம்... ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் மாசிமாத பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் மாசிமாத  பிரதோஷம்...  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

கரூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதும், தொன்மையானதுமாக விளங்கி வருகிறது. இக்கோயிலில், மாசி மாத பிரதோஷம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில், நந்திஎம்பெருமானுக்கு விஷேச பூஜைகளும், கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, கற்பூர ஆரத்தி, கோபுர ஆரத்திகளை எடுக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து மஹா தீபாராதனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து பிரதோஷ நாயனார், சுவாமி அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் ஆலயத்திற்குள் வீதி உலா வந்து விஷேச சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.