அழகுப்போட்டியில் "ரேம்ப் வாக்" செய்து அசத்திய காவலர்கள் இடமாற்றம்!!

அழகுப்போட்டியில் "ரேம்ப் வாக்" செய்து அசத்திய காவலர்கள் இடமாற்றம்!!

மயிலாடுதுறையில், அழகு போட்டியில் ஒய்யாரமாக நடந்து சென்ற காவலர்கள், பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

"ரேம்ப் வாக்" செய்து அசத்திய காவலர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, தனியார் அமைப்பு சார்பில் அழகு போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டார். அப்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்களை, "ரேம்ப் வாக்" செய்யுமாறு போட்டியாளர்கள் வற்புறுத்த, காவலர்களும் மேடையில் ஒய்யாரமாக நடந்து சென்றனர்.

இது தொடர்பான காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட செம்பனார் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உட்பட 5 பேரை பணியிட மாற்றம் செய்து, காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டார்.