துணை ஆணையர் ஹரிகிரண் தலைமையில் மெகா முகக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி...

சென்னை தியாகராய நகர் காவல் மாவட்டத்தில் மெகா முகக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் தலைமையில் நடைபெற்றது.

துணை ஆணையர் ஹரிகிரண் தலைமையில் மெகா முகக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி...

சென்னை தியாகராய நகர் காவல் மாவட்டத்தில் மெகா முகக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் தலைமையில் நடைபெற்றது.

கொரோனா தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் மத்தியில் முகக்கவசம் குறித்த விழிப்புணர்வை காவல்துறை மற்றும் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சென்னை தியாகராய நகர் காவல் மாவட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் விஷு மஹாஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தியாகராய நகர் துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத் தலைமையிலான காவல் துறையினர் வீதி வீதியாகச் சென்று கடைகள் மற்றும் வீடுகளில் உள்ள பொதுமக்களிடம் முகக்கவசத்தின் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்து கட்டாயம் முகக்கவசம் அணிய வலியுறுத்தியதோடு, இலவசமாக முகக்கவசங்களையும் வழங்கினர். மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.