அமைச்சர் கே.என். நேருவின் பேச்சால் கட்சி வட்டாரத்தில் சலசலப்பு!!!! காரணம் என்ன?

அமைச்சர்  கே.என். நேருவின் பேச்சால் கட்சி வட்டாரத்தில் சலசலப்பு!!!! காரணம் என்ன?

பல்லடத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ வ வேலுவை அந்த ஆளு என ஒருமையில் விமர்சித்த உள்ளாட்சி துறை அமைச்சர் நேருவின் பேச்சாள் கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | இன்ஸ்டாகிராமில் ஐபிஎல் டிக்கெட் மோசடி... எச்சரிக்கும் காவல்துறை!

பொள்ளாச்சியில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் வழியில் பல்லடம் பயணியர் மாளிகைக்கு மாநில உள்ளாட்சித் துறை அமைச்சரும் திமுக மூத்த தலைவர்களுள் ஒருவரான கே என் நேரு வருகை தந்தார்.அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்லடத்தில் நீண்ட காலமாக போக்குவரத்து நெருக்கடி பிரச்சனை இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்தபடியே பதிலளித்த அமைச்சர் கே என் நேரு அந்த ஆளு கரூரில் தான் தற்போது இருக்கிறார்.அவருக்கு இதுகுறித்து எழுதி அனுப்புவதாகவும் உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | 25 மதிப்பெண் இருந்தால் தான் தேர்ச்சியா...அறிக்கை வெளியிட்ட கல்வித்துறை!

எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்களுக்கு உதவ முடியவில்லை: கே.என்.நேரு பேச்சு |  KN Nehru - hindutamil.in

திமுக மூத்த அமைச்சர்களில் ஒருவரான கே என் நேரு சக கட்சி அமைச்சரான நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ வ வேலுவை அந்த ஆளு என ஒருமையில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு அக்கட்சி வட்டாரங்களில் சலசலப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.