10, 267 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி - தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்

பெரம்பலூர் அருகே 10ஆயிரத்து, 267  விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியினை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

10, 267 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி - தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, பெரம்பலுார் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சியர்   ஸ்ரீவெங்கடபிரியா ஆகியோர் தலைமையேற்றனர்.

நிகழ்ச்சியில், 10ஆயிரத்து, 267 விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், பெரம்பலுார் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட  ஊராட்சிக் குழுத்தலைவர் இராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.