மார்க் கம்மின்னு போனா மாட்னீங்க... செம்மயா செக் வைத்த அமைச்சர்...

தற்போது வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் மாணவர்களுக்கு திருப்தி இல்லை என்றால் வரும் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பித்தால் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மார்க் கம்மின்னு போனா மாட்னீங்க... செம்மயா செக் வைத்த அமைச்சர்...

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டில் (2020-2021) பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது.12 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக மாணவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடும் பணிகள் மிக விரைவாக எடுக்கப்பட்டு இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.ஜூலை 31க்குள் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே தமிழக பாடத்திட்டத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது என்றார்.

 வருகிற 22 ஆம் தேதி மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். மதிப்பெண் குறைவாக இருப்பதாக நினைக்கும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதிக்கொள்ளலாம். தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8,16,473. இதில் 30,600 பேர் 550-600 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

 தற்பொது வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் யாரும் இல்லை. மேலும், வகுப்புக்கு வராத 1,656 பேர் தேர்ச்சி பெறாதவர்களாக கணக்கிடப்பட்டுள்ளார்.பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்து தேர்வு எழுதாத பிளஸ் 1 மாணவர்கள் 1,650 பேர் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் தற்போது மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள், தேர்வு எழுத முடியாதவர்கள், 39,000 தனித் தேர்வர்கள் ஆகியோருக்கு வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்படும் என்றார்.