தமிழகத்தில் வரும் 19ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு....

தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக   சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் வரும்  19ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு....

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் வங்கக் கடல் பகுதிக்கு 5 நாட்களுக்கு மீனவர் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்   மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு  மையம் கூறியுள்ளது.