“தமிழர்கள் குறித்து மோடி பேசுவது ஏமாற்று வேலை...” வைகோ பேட்டி!!

“தமிழர்கள் குறித்து மோடி பேசுவது ஏமாற்று வேலை...” வைகோ பேட்டி!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள  புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  கோயம்பேட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, சாதி வேறுபாடுகள் இருக்க கூடாது என உறுதி மொழி எடுக்கிறோம் எனவும் அம்பேத்கர் கொள்கைக்கு எதிராக ஆளுநர் ஆர். என்.ரவி பேசி வருகிறார் எனவும் கூறினார்.  மேலும் அமைதியாக இருக்க வேண்டும் எனவும் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம் எனவும் கூறினார்.

அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என பேசி வருகிறார் அண்ணாமலை எனக் கூறிய வைகோ திமுக தொடர்பாக அவர் என்ன ஆதாரங்கள் வைத்து இருக்கிறார் என வெளிப்படுத்தட்டும் அதற்கு பின்னர் அது தொடர்பாக பேசலாம் என தெரிவித்தார்.

மேலும் தமிழ் புத்தாண்டு, தமிழர்கள் குறித்து மோடி பேசுவது ஏமாற்று வேலை எனவும் ஆனால் அவர் தமிழர்களுக்கு என்ன செய்தார் எனக் கேள்வியெழுப்பினார்.  அதனோடு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர். என்.ரவி இருவரும் தமிழ் பற்றி பேசுவது ஏமாற்று வேலை தான் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:   “சொல்லக்கூடிய கருத்துகள் அவர்களை குத்தி கிழிப்பது போல...” தமிழிசை!!