சிவகங்கை: 5 வயது மகளை துண்டால் இறுக்கி கொன்ற தாய், சேலையில் தூக்கிட்டு தற்கொலை...! காரணம் என்ன?

சிவகங்கை: 5 வயது மகளை துண்டால் இறுக்கி கொன்ற தாய், சேலையில் தூக்கிட்டு தற்கொலை...! காரணம் என்ன?

சிவகங்கை அருகே உடல்நலம் பாதித்த மகளுக்கு  சிகிச்சை அளிக்க முடியாததால், 5 வயது மகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் சிகிச்சையில் மகள்:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரசினம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். கொத்தனார் பணி செய்து வரும் இவருக்கு சங்கீதா என்பவருடன் திருமணம் ஆகி, பிரகன்யா என்ற 5 வயது மகள் உள்ளார்.  ஆனால், பிரகன்யா ஆசனவாய் துவாரம் இல்லாமல் பிறந்ததால் தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் குழந்தை பிரகன்யாவை மதுரையில் உள்ள மருத்துவமனைக்குச் அழைத்து சென்று உடல்நிலையை பரிசோதனை செய்து வந்துள்ளனர்.

குழந்தையை கொன்று, தாயும் தற்கொலை:

இந்நிலையில் நேற்று உறவினர்களுடன் பேசி சந்தோசமாக இருந்து வந்த குழந்தையின் தாய் சங்கீதா, திடீரென தனது ஐந்து வயதின் மகள் பிரகன்யாவை துண்டால் கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு, தானும் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, பணி முடிந்து வீடு திரும்பிய ஜெயராஜ், வீட்டில் தனது மனைவியும், மகளும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையும் படிக்க: திமுக தான் என்னை கடத்தியது...அதிமுக கவுன்சிலர் பகீர்...!

இரட்டை மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி:

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சங்கீதா மற்றும் பிரகன்யாவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உடல்நலம் பாதித்த மகளுக்கு  சிகிச்சை அளிக்க முடியாததால் தாயும் மகளும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் கிராம மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.