3 குழந்தைகளின் கழுத்தை அறுத்து தாய் தற்கொலை... 

வேலூரில் 3 குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 குழந்தைகளின் கழுத்தை அறுத்து தாய் தற்கொலை... 

வேலூர் மாவட்டம் வேலூர் சலூன் பேட்டை பகுதியில் தினேஷ் மேஸ்திரி வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு ஜீவிதா வயது 23 என்கிற மனைவியும் அக்ஷயா வயது 7, நந்தகுமார் வயது 5, மேலும் ஆறு மாத கைக்குழந்தை இருந்துள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்து போன ஜீவிதா இன்று மாலை மூன்று குழந்தைகளின் கழுத்தை அறுத்து அவர்களை கொன்று விட்டு தானும் வீட்டிலேயே தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்து வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தாய் தனது மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினேஷ் தற்போது தலைமறைவாக உள்ளார் இவனை பிடிக்க தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.