"பதவிக்காக எனது கொள்கையும் தத்துவமும் மாறாது" பி.டி.ஆர்
பதவிக்காகவோ பொறுப்பிற்காகவோ எனது கொள்கையும் தத்துவமும் என்றும் மாறாது. அதுதான் என் அடையாளம் என அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.
மதுரை நீதிமன்ற வளாகத்தில் மூத்த வழக்குரைஞர்கள் மூவரின் படத்திறப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் கூடுதல் தலைமை நீதிபதி உள்ளிட்டோரோடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் கலந்துகொண்டார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தந்தையும் மூத்த வழக்குரைஞருமான பழனிவேல் ராஜன், தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியாக அறியப்படும் அப்போதைய தலித் சிறுத்தைகள் அமைப்பை தமிழ்நாட்டில் தொடங்கிய மலைச்சாமி உள்ளிட்ட மூன்று பேரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.
அப்போது மேடையில் பேசிய அமைச்சர், "நான் என் தந்தையின் மகனாக இங்கு வந்துள்ளேன் அமைச்சராக இல்லை. எனது தாத்தா மற்றும் எனது தந்தை வழக்குரைஞராக இருந்தனர். எனது தந்தையால் வேறு தொழிலுக்கு வழிகாட்டப்பட்டதால் நான் வழக்குரைஞராக ஆக முடியவில்லை" என தெரிவித்தார்.
தொடர்ந்து, "பொறுப்புக்காகவோ, பதவிக்காகவோ ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காகவோ எதிர் கட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவோ நான் எனது தனிமனித கொள்கையும் தத்துவமும் என்றும் மாறாது" எனக் கூறிய அவர் "அடையாளம் தான் எனக்கு முக்கியம்" என தெரிவித்தார்.
இதையும் படிக்க:2000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது...! - ரிசர்வ் வங்கி அறிவிப்பு...!