வன அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்...!

வன அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்...! 25 பேர் கைது.

வன அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்...!

நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சி பகுதிகளில் தொடரும் காட்டு யானை தாக்குதல்களை கட்டுப்படுத்த கோரி கூடலூர் கோட்ட வன அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுவரை மூன்று மாதங்களுக்குள் சுமார் நான்கு பேர் காட்டு யானை தாக்கி இறந்துள்ள நிலையில், காட்டு யானைகளை விரட்டவும், ஊருக்குள் வரும் யானைகளை கட்டுப்படுத்தவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இந்த முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வனத்துறையின் நடவடிக்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து இப்பிரச்சனையில் வனத்துறையும்,  அரசும் மெத்தனம் காட்டினால் மாநில அளவில் இப்பிரச்சனை குறித்து போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மாவட்ட அலுவலக வன அலுவலகத்திற்குள் புகுந்து முற்றுகையில் ஈடுபட முயன்ற கட்சியினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.