"தமிழ்நாடு முழுவதும் கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும்" நாடார் பேரவை கோரிக்கை!
கள்ள சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்றால், தமிழக முழுவதும் கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என தமிழ்நாடு நாடார் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
கரூர் மாவட்டம், தமிழ்நாடு நாடார் பேரவையின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில தலைவர் என் ஆர் தனபாலன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழகத்தில் கள்ள சாராயம் குடித்து உயிர் பலியாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பனை மரக்கள் ஒரு இயற்கை உணவாகும். கள்ளு குடித்து உயிர் இழப்பு ஏற்படுவதை யாரேனும் நிரூபித்தால், எங்கள் பேரவையின் சார்பில் ஒரு கோடி பரிசு தருகிறோம் என அறிவித்தோம், பின்னர் பத்து கோடி பரிசு தருவதாகவும் அறிவித்தோம். ஆனால் அதற்கு எந்த பதிலும் இல்லை எனக் கூறினார்.
மேலும், தேர்தல் வரும் பொழுது பனை மரத்தை பாதுகாப்போம் பனைமரத் தொழிலாளர்களுக்கு தனி ந
ல வாரியம் அமைப்போம் என்றெல்லாம் அறிவித்தார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு அதனை மறந்து விட்டார்கள். கள்ளுக்கடை திறந்தால் அயல் நாட்டு மதுபானங்கள் விற்பனையாகாது என பயந்து கள்ளுக்கடைகளுக்கு அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர். தமிழக அரசு எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான, கள்ளுக்கடைகளை தமிழகம் முழுவதும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து, எங்கள் கோரிக்கையை ஏற்று கள்ளுக்கடைகளை தமிழகத்தில் திறக்காவிட்டால் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க:"கலைஞர் நூற்றாண்டு விழா" திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்!