அண்ணாமலையால் பாஜகவுக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது.! பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி பேச்சு.! 

அண்ணாமலையால் பாஜகவுக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது.! பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி பேச்சு.! 

அண்ணாமலையின் வருகையால் தமிழக பாஜகவுக்கு புதிய உத்வேகமும் புது ரத்தம் பாய்ச்சியது போல இருக்கிறது என பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கார்த்தியாயினி  கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில்  பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளரும், வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி கலந்துகொண்டார்.

அதன்பின் கார்த்தியாயினி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையின் வருகையால் தமிழக பாஜகவுக்கு புதிய உத்வேகமும் புது ரத்தம் பாய்ச்சியது போலவும் இருக்கிறது என்று கூறினார். 

மேலும், கொங்குநாடு விவகாரத்தில் அந்த பகுதி மக்களின் கோரிக்கை பேசப்பட்டு வருகிறது என்றும், அந்த  விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ! அதை கட்சி அறிவிக்கும் என்றும் கூறினார்.