ஓட்டப்பிடாரம் அருகே புதிய பகுதி நேர நியாய விலை கடை...!

ஓட்டப்பிடாரம் அருகே  புதிய பகுதி நேர நியாய விலை கடை...!

ஓட்டப்பிடாரம் அருகே தெற்கு சிந்தலக்கட்டை கிராமத்தில் புதிதாக நியாய விலை கடை கட்டி தர வேண்டுமென அக்கிராம பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக பகுதி நேர நியாய விலை கடை கட்டிடம் கட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து,  இன்று தெற்கு சிந்தலகட்டை கிராமத்தில் நடைபெற்ற விழாவில் புதிய பகுதி நேர நியாய விலை கடையை கனிமொழி எம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் அவர்,  முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார் .

தொடர்ந்து ஓட்டப்பிடாரம் அருகே விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கக்கரம்பட்டி கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமூக நலக்கூட கட்டிடத்தினை கனிமொழி எம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதையும் படிக்க     }  கொடுக்கப்பட்டுள்ள 31 அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்... உதயநிதி!!

இந்த நிகழ்ச்சியில்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டப்பிடாரம் சண்முகையா, விளாத்திகுளம் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், துணை சேர்மன் காசி விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க      }  தென்காசியில் விவசாய நிலத்தில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு..! மனு கொடுக்க திரண் ட மக்கள்...!