சசிகலா எத்தனை பொய் சொன்னாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது-எடப்பாடி பழனிசாமி

சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சசிகலா எத்தனை பொய் சொன்னாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது-எடப்பாடி பழனிசாமி

சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசி வருவது குறித்து சரமாரியாக விமர்சித்தார். சசிகலா தொடர்ந்து தவறான தகவல்களை கூறி வருவதாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி, எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அவரால் அதிமுகவை வீழ்த்த முடியாது என்றார்.

எம்ஜிஆருக்கே அரசியல் ஆலோசனை வழங்கியதாக  சசிகலா கூறுவது  நகைப்பிற்க்குரியது என்றும் அவர் யாருக்கும் ஆலோசகராக இருந்ததில்லை எனவும்  பழனிச்சாமி கூறியுள்ளார்.சசிகலா இருந்த காலகட்டத்திலும் அதிமுக தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது என அவர் தெரிவித்திருக்கிறார்.