தங்களை காப்பாற்றி கொள்ள டெல்லி வீதிகளில் ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் அலைகின்றனர்: புகழேந்தி

தங்களை காப்பாற்றி கொள்ள டெல்லி வீதிகளில் ஒ.பி.எஸ் - இ பி எஸ் டெல்லி தெருக்களில் அலைந்து கொண்டு இருக்கின்றனர் என புகழேந்தி விமர்சித்துள்ளார்.

தங்களை காப்பாற்றி கொள்ள டெல்லி வீதிகளில் ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் அலைகின்றனர்: புகழேந்தி

அண்மையில் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்ட கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை மரியாதை நிமித்தமாக  சந்தித்தார்.இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, தொலைக்காட்சி விவாத நிகழ்சிகளில் பங்கேற்ற அப்பாவு தற்போது சபாநாயகராக பொறுபேற்றுள்ளார் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தேன்.

ஒ.பி.எஸ் - இ பி எஸ் ஆகிய இருவரும் அதிமுக வை விற்பதற்கு டெல்லியின் வீதிகளில் திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்களை காப்பாற்றி கொள்ள டெல்லி தெருக்களில் அலைகிறார்கள் என்பது தான் உண்மை கட்சியை காப்பாற்ற அல்ல என்றார், மிகவும் மோசமான நிலையில் அதிமுக மீட்டெடுக்க முடியாமல் எடப்பாடி எனும் சர்வாதிகாரியின் பிடியில் உள்ளது.

 மக்கள் பிரச்சனைக்காக சென்றிருந்தால் கூட்டணி கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து சென்றிருக்க வேண்டும். சசிகலா அழைத்தால் நான் பேசுவதற்கும் பார்பதற்க்கும் தயாராக இருக்கிறேன்.சசிகலா அவர்களால் தான் இந்த காட்சியை காப்பாற்ற முடியும்.ஒ.பி.எஸ் - இபிஎஸ் ஆல் கட்சியை காப்பாற்ற முடியாது.

 இன்றைய தினம் திமுக இல்லை என்றால் திராவிட இயக்கத்தை காப்பாற்ற முடியாது என்ற நிலை உள்ளது என்றும் பெரியார் பெயர் வைத்து வளர்ந்தவன் என்றும் திராவிட இயக்க சிந்தனையில் என்னுடைய செயல்பாடு இருக்கும் விரைவில் என்னுடைய முடிவை அறிவிப்பேன் என தெரிவித்தார்.