மே 1-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு...!

மே 1-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு...!

மே ஒன்றாம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கிராம சபை கூட்டம் என்பது, இந்தியக் குடியரசு தினம், தொழிலாளர் தினம்,  இந்திய சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, மற்றும் உலக நீர் நாளான மார்ச் 22-ம் தேதி, உள்ளாட்சி தினமான நவம்பர் 1-ம் தேதி ஆகிய 6 நாட்களில் நடத்தப்படுகிறது. 

இதையும் படிக்க : கேரள மாநிலத்தில் வந்தே பாரத் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...!

இந்நிலையில், தொழிலாளர் தினமான மே ஒன்றாம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், கிராம சபை கூட்டம் எங்கு நடத்தப்படுகிறது என்பதை பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும், மதசார்புள்ள வளாகத்தில் நடத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.