"முதலமைச்சரை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறாா்" - தலைமை கொறடா கோவி செழியன்.

"முதலமைச்சரை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறாா்" - தலைமை கொறடா கோவி செழியன்.

சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி மற்றும் இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவொற்றியூர் பெரியார் நகரில் கிழக்குப் பகுதி செயலாளர் மண்டல குழு தலைவருமான திமு தனியரசு தலைமையில் நடைபெற்றது.

 இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சென்னை  வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ., தமிழ்நாடு அரசு தலைமை கொறடா முனைவர் கோவி செழியன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராச்சாமி,  சட்டமன்ற உறுப்பினர் கேபி சங்கர் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி இரண்டு பெண்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் 500 பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

பின்னர் பேசிய தமிழ்நாடு அரசு தலைமை கோவி செழியன்;  " உத்திரபிரதேசம் பஞ்சாப் கர்நாடகா மாநிலங்களில் காங்கிரஸ்- பாஜக அரசியல் கட்சிகளுக்கிடையே போட்டி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் மக்களின் ஆரிய திராவிடப் போராட்டம் இருக்கிறது என்று சொன்னால் பெரியாரின் விதை பட்டுப் போகவில்லை. இன்று நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சிக்கு பயப்படுகிறாரோ இல்லையோ,.. திமுக தலைவர் தளபதிக்கு பயப்படுகிறார் அச்சப்படுகிறார் குனிந்து வணங்குகிறார் என்று தெரிவித்தார்.

TN CM Stalin to meet PM Modi today - Oneindia News

இதையும் படிக்க     } " தோல்வியை மறைக்கவே ரூ.2,000 செல்லாது என அறிவிப்பு... " - அமைச்சர் மா.சுப்ரமணியன்

இதில் மேற்குப் பகுதி செயலாளர் வைமா அருள்தாசன் தலைமை செயற்குழு உறுப்பினர் ராமநாதன் ஆசைத்தம்பி எம்.பி. குமார் சம்பத் உள்பட மாவட்ட பகுதி வட்டக் கழகம் மற்றும் பல்வேறு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க     }  உக்ரைனுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு, ஜெலென்ஸ்கி அழைப்பு....!