பெட்ரோல் விலை உயர்வு குறித்து பிரதமர் பதில் கூற வேண்டும்: திருச்சி சிவா

நாளைய கூட்டத்தொடரை ஒத்திவைத்து விட்டு விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க  நோட்டிஸ் வழங்க முடிவு எடுத்துள்ளதாக  திமுக மாநிலங்களவை குழு தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து பிரதமர் பதில் கூற வேண்டும்: திருச்சி சிவா

அனைத்து கட்சி கூட்டம் முடிந்த பின்பு டெல்லியில்  செய்தியாளர்களை சந்தித்த அவர், 
எதிர்கட்சிகளின் கருத்துக்களை  மத்திய அரசு கேட்கவேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.. விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு  உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து  விளக்கம் அளிக்க வேண்டும் என அனைத்து  கட்சி  கூட்டத்தில் வலியுறுத்தியதாக திமுக எம்பி சிவா கூறினார்.  மேகதாது அணை  விவகாரத்தில் DPR தயாரிக்க மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை திரும்பப்பெற அவையில்  வலியுறுத்தப்படும் எனவும்  திருச்சி  சிவா தெரிவித்தார்.