மதுரை : கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி திருவிழா!

மதுரை : கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி திருவிழா!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா இன்று (மார்ச் 26) தொடங்கி ஏப்.10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க : அதிகாரத்திமிரின் உச்சம்! – கண்டனம் தெரிவித்துள்ள சீமான்

இவ்விழா நாட்களில் தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் தங்கக் குதிரை, வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இதையடுத்து, ஏப்.5-ம் தேதி பங்குனி உத்திரத்தையொட்டி பவுர்ணமி பூஜை, தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏப்.6-ம் தேதி இரவு 7 மணியளவில் சூரசம்ஹார லீலை நடைபெறும். அடுத்த நாள் இரவு 7.45 மணியளவில் பட்டாபிஷேகம் நடைபெறும்.

இதைத்தொடர்ந்து இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்.8-ம் தேதி பகல் 12.20 மணியளவில் வெகு விமர்சையாக நடைபெறும். அதைத்தொடர்ந்து, ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 6 மணியளவில் தேரோட்டமும், ஏப்ரல் 10-ஆம் தேதி தீர்த்தவாரி பூஜையுடன் திருவிழா நிறைவுபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.