பொதுமக்கள் முதலமைச்சரிடமே புகார் அளிக்கலாம்..... தமிழக அரசின் புதிய முயற்சி

மக்கள் தங்கள் குறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கும் வகையில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முதலமைச்சரிடமே புகார் அளிக்கலாம்..... தமிழக அரசின் புதிய முயற்சி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி திட்டங்களை செய்து வருகிறார். 

கொரோனா தொற்றின்  இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இந்த காலகட்டத்தில்,தமிழக  அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உதாரணமாக நடுத்தர மக்களின் வறுமையை போக்க கொரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் போன்ற பல்வேறு திட்டங்களை பேரிடர் காலத்திலும் அமல்படுத்தி வருகிறார்.

அதே நேரத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக ஆக்சிஜன் இறக்குமதி, தடுப்பூசி கொள்முதல், கூடுதல் கொரோனா சிகிச்சை மையங்கள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் 

இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க cmcell.tn.gov.in என்ற தனிப்பிரிவு இணையதளம் தொடக்கபட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வழங்கிய புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இணையத்தில் உடனடியாக தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.