தமிழகத்தில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடு: ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் மக்கள்...

தடுப்பூசி தட்டுப்பாட்டால் தமிழகத்தின் பல பகுதிகளில், தடுப்பூசி போட சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

தமிழகத்தில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடு: ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் மக்கள்...

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் விளைவால் தமிழகம் முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசி வந்தால் மட்டுமே அடுத்தக்கட்ட பணி தொடங்கப்படும் என்பதால்,ஆங்காங்கே தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது  

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, கடலூர்  அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆள் நடமாட்டமின்றி, தடுப்பூசி மையமானது வெறிச்சோடி காணப்படுகிறது.இதேபோன்று, கரூரில் உள்ள மையத்தில் இரண்டாவது நாளாக இன்றும் தடுப்பூசி இல்லாததால் அதிகாலை முதல் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.