தமிழகம் - கேரளா இடையே  பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு...

தமிழகத்தில் கோவிட் கட்டுப்பாடு விதிமுறைகளை வரும் 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் - கேரளா இடையே  பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு...

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் பல கட்டங்களாக பல தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் கோவிட் கட்டுப்பாட்டு விதிமுறைகள் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மு.க. ஸ்டாலின், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும்,. பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர, கர்நாடகாவை தொடந்து கேரளாவிற்கும் பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.