பாலியல் வழக்கு... ராஜகோபாலை 5 நாட்கள் காவலில் எடுக்க மனு.... நாளை விசாரணை
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் சார்பில் தாக்கல் செய்யபட்ட மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை கே.கே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றிய ராஜகோபால் பள்ளியில் படித்த மாணவிகள் மீது பாலியல் தொல்லை அளித்ததாக மாணவிகள் சமூக வலைதளங்களில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபால் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ஆசிரியர் ராஜகோபால் ஜாமின் கோரி சென்னை மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மற்றும் ஆசிரியர் ராஜகோபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி முகமது பரூக் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஜாமின் மனு மீதான விசாரணையை வருகிற 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்
மேலும் காவல் துறையினர் சார்பில் தாக்கல் செய்யபட்ட மனுவை நாளை விசாரிப்பதாக தெரிவித்தார்.