கடல் போல் காட்சியளிக்கும் விளையாட்டு மைதானம்

சேலத்தில் உள்ள அரசு மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் உடற்பயிற்சி செய்ய முடியாமல் மாணவர்கள் சிரமமடைந்துள்ளனர்.  

கடல் போல் காட்சியளிக்கும் விளையாட்டு மைதானம்

சேலத்தில் உள்ள அரசு மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் உடற்பயிற்சி செய்ய முடியாமல் மாணவர்கள் சிரமமடைந்துள்ளனர்.  

சேலத்தில் நேற்று இரவு முழுவதும் 14 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சேலம் மாநகரம் முழுவதும் தண்ணிரில் மிதந்தது. சேலம் மாவட்டத்தில் அரசு மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் சில பகுதிகள் மழை நீரால் முழ்கியது. இதனால்  கடல்போல் காட்சி அளித்தது. இதனால் நடைப் பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி எடுக்க முடியாமல் மாணவர்களும், பொதுமக்களும்  அவதிப்பட்டனர். எனவே இதுகுறித்து மைதான நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.