பிளஸ்-2 தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு...எதிர்பார்ப்பில் மாணவர்கள்!

பிளஸ்-2 தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு...எதிர்பார்ப்பில் மாணவர்கள்!

பிளஸ்-2 பொதுத்தோ்வுக்கான முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 3-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினா். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்று, மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டு, தயார் நிலையில் இருக்கின்றன.

இதையும் படிக்க : கேரளாவில் பரபரப்பு...திடீரென சொகுசு படகு கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு...பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!

தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடவுள்ளார். தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.dge.tn. gov.in www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணைய முகவரியில் அறியலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக முடிவுகள் அனுப்பி வைக்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்றைய தினமே பள்ளிகளில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளவும் அரசு தேர்வுகள் துறை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.