3 வயது சிறுவன் மர்ம மரணம்... தாயின் இரண்டாவது கணவரை பிடித்து போலீசார் விசாரணை...

சென்னை ராயப்பேட்டை பகுதியில் 3 வயது சிறுவன் மர்ம மரணம் அடைந்ததையொட்டி தாயின் இரண்டாவது கணவரிடம் போலீசார் விசாரணை.

3 வயது சிறுவன் மர்ம மரணம்... தாயின் இரண்டாவது கணவரை பிடித்து போலீசார் விசாரணை...
ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி பிரியங்கா. இவர்களுக்கு 3 வயதில் சாய்ராம் என்று ஒரு மகன் இருக்கிறான். குப்புசாமி கடந்த ஆண்டு இறந்துவிட்டார். இந்நிலையில் பிரியங்கா நான்கு மாதங்களுக்கு முன்பு டேவிட் வினோத் என்பவரை இரண்டாவதாக  திருமணம் செய்துள்ளார்.
டேவிட், ப்ரியங்கா, சாய்ராம் மூன்று பேரும் கோபாலபுரம் புதுப்பேட்டை பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி சிறுவன் சாய்ராம் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக்கப்பட்டு உள்ளதாக இறந்த குப்புசாமியின் உறவினர்களுக்கு பிரியங்கா போன் செய்து கூறியுள்ளார்.
 
இதனையடுத்து உறவினர்கள் ராயப்பேட்டை மருத்துவமனை சென்று பார்த்த போது சிறுவன் இறந்து விட்டதாக கூறினர். மேலும் மாடியிலிருந்து விழுந்து சிறுவன் இறந்ததாக பிரியங்காவும், டேவிட்டும் கூறிய நிலையில் அது போன்ற எந்த காயங்களும் சிறுவனின் உடலில் இல்லாத காரணத்தால் சிறுவனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் டேவிட்டை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.