பிரபல தங்க நகை டிரேடிங் நிறுவனத்தில் சோதனை.. மோசடி புகார் எழுந்த நிலையில் சோதனை செய்யும் போலீசார்!!

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல நகை டிரேடிங் நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

பிரபல தங்க நகை டிரேடிங் நிறுவனத்தில் சோதனை.. மோசடி புகார் எழுந்த நிலையில் சோதனை செய்யும் போலீசார்!!

சென்னை, நெல்லை, திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவடங்களில் கிளை அமைத்த ஆருத்ரா டிரேடிங்க்ஸ் என்ற நிறுவனம், பழைய தங்கத்தை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், அந்த நிறுவனம் சார்பில் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால், ஒவ்வொரு மாதமும் 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கவர்ச்சிகர விளம்பரம் ஒன்று வெளியானதாக கூறப்படுகிறது.

இதை நம்பி ஏராளமான பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால், அதன்பின் நிறுவனத்தாரிடம் இருந்து சரியான பதில் அளிக்கப்படாததால், மோசடி நிகழ்வதாக காவல்துறையில் மக்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்னை அமைந்தகரை, அண்ணாநகர், திருமங்கலம், கிளைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் நரேஷ், 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக தாங்கள் எந்த விம்பரமும் செய்யவில்லை என விளக்கம் அளித்தார். அதேபோல் திருவள்ளூர் திருவாரரூர் திருவண்ணாமலை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டஙக்ளில் செயல்பட்டு வரும் ஆருத்ரா டிரேடிங் நிறுவனத்தில் சோதனை நடந்து வருகிறது.