சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதியின் உருவப்படம்.?ஆகஸ்ட்டில் திறக்க வாய்ப்பு.!  

சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதியின் உருவப்படம்.?ஆகஸ்ட்டில் திறக்க வாய்ப்பு.!  

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதியின்  முழு உருவப்படத்தை  திறக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார். இந்நிலையில், அவருடைய புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில்,சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் தலைவர்கள் பட வரிசையில் கலைஞர் கருணாநிதி படமும் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கலைஞர் கருணாநிதி முழு உருவப்படம் திறக்க வாய்ப்புகள் உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஏற்கனவே திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜா ஜி, அம்பேத்கர்,பெரியார், அண்ணா, காமராஜர், எம். ஜி.ஆர், பசும்பொன் முத்துராமலிங்கம், ஜெயலலிதா உள்ளிட்ட 15 தலைவர்கள் படம் சட்டப்பேரவை அரங்கில் இடம்பெற்றுள்ளன.16வதாக கலைஞர் முழுஉருவப்படம் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.