மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்... கண்டனம்  தெரிவித்து மாணவிகள் உள்ளிருப்பு  போராட்டம்...

சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில்  மாணவிகளுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக பேராசிரியரை கண்டித்து மாணவிகள் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்... கண்டனம்  தெரிவித்து மாணவிகள் உள்ளிருப்பு  போராட்டம்...

சென்னை கோயம்பேட்டில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. அந்த கல்லூரியில் படித்து வரக்கூடிய இரண்டாமாண்டு மாணவி ஒருவருக்கு அதே கல்லூரி ஆங்கில பேராசிரியரான தமிழ்செல்வன் என்பவர் ஆன்லைன் வகுப் பின் போது பாலியல் ரீதியாக மெசேஜ் அனுப் பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். பின்னர் இதே போல் பல மாணவிகளுக்கு பேராசிரியர் தமிழ் செல்வன் பாலியல் ரீதியாக மெசேஜ் அனுப் பி இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேராசிரியர் தமிழ்செல்வன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து தகவலறிந்த சி.எம். பி.டி காவல்துறையினர் மற்றும் கல்லூரி முதல்வர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளிடம் சமாதானமாக பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த வாக்குறுதியின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். 

இதனையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியரான தமிழ் செல்வனை கல்லூரி நிர்வாகம் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். மேலும் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு பாலியல் ரீதியாக பேசியிருப்பது உண்மைதானா என விசாரணை நடத்த உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் காவல்துறையினரிடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1 மணி நேரமாக நடைபெற்ற இந்த உள்ளிருப்பு போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.