5 ஏ.டி.ஜி.பி-க்களை டி.ஜி.பி-யாக அந்தஸ்து உயர்வு... தமிழகத்தில் டி.ஜி.பி-க்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு...

தமிழகத்தில் ஐந்து ஏ.டி.ஜி.பி-க்களை டி.ஜி.பி-யாக அந்தஸ்து உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் டி.ஜி.பி-க்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

5 ஏ.டி.ஜி.பி-க்களை டி.ஜி.பி-யாக அந்தஸ்து உயர்வு... தமிழகத்தில் டி.ஜி.பி-க்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு...

1990 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரிகளான தமிழகத்தில் பணியாற்றும் ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள 5 காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி-யாக அந்தஸ்து உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழக உள்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவரும் கூடுதல் டி.ஜி.பி-யாக உள்ள ஏ.கே. விஸ்வநாதன், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் டி.ஜி.பி ஆபாஷ் குமார், அயல் பணியில் உள்ள  ரவிச்சந்திரன்,  தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் டி.ஜி. பி சீமா அகர்வால் ஆகிய 5 ஏ.டி.ஜி.பி-க்களுக்கு  டி.ஜி.பி-யாக அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 அதிகாரிகள் டி.ஜி.பி-யாக அந்தஸ்து உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள டி.ஜி.பி-க்களின் எண்ணிக்கை 1 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கூடுதலாக 5 டி.ஜி.பி-க்கள் அந்தஸ்து உயர்த்தப்பட்ட நிலையில் காவல்துறை உயரதிகாரிகளின் முக்கிய பணியிட மாற்றங்கள் விரைவில் ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.