கள்ளச் சாராய விவகாரத்தில் அதிமுக சார்பில் விரைவில் போராட்டம் - ஓ எஸ் மணியன் தகவல்!

கள்ளச் சாராய விவகாரத்தில் அதிமுக சார்பில் விரைவில் போராட்டம் - ஓ எஸ் மணியன் தகவல்!

கள்ளச் சாராய உயிரிழப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் விரைவில் போராட்டத்தை எதிர்பார்க்கலாம் என்று முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க : கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் இவர்தான்... அதிகாரப்பூர்வமாக அறிவித்தது காங்கிரஸ் தலைமை...!

இக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ எஸ் மணியன், திமுக அரசு சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளதாகவும், நாட்டைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார். 

தொடர்ந்து பேசிய அவர், கள்ளச் சாராய உயிரிழப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் விரைவில் போராட்டத்தை எதிர்பார்க்கலாம் என்றும் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.