பொதுமக்களுக்கு ரூ. 85 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்...!

திருவிடைமருதூரில் 838 பயனாளிகளுக்கு ரூ. 85 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினர்

பொதுமக்களுக்கு ரூ. 85 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்...!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை நடைபெற்றது. இதில்  வேளாண்மை துறை சார்பில் 120 பயனாளிகளுக்கும், வேளாண் பொறியியல் துறை சார்பில் மூன்று பயனாளிகளுக்கும், சமூக நலத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கும், சுகாதாரத் துறை சார்பில் 28 பயனாளிகளுக்கும், வருவாய்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கும், மகளிர் திட்ட மூலம் 384 பயனாளிகளுக்கும், மகளிர் திட்டம் கடன் வழங்குதல் மூலம் 55 பயனாளிகளுக்கும், மகளிர் திட்டம் தையல் பயிற்சி மூலம் 32 பயனாளிகள், தாட்கோ மூலம் 176 பயனாளிகள் என மொத்தம் 838 பயனாளிகளுக்கு சுமார் ரூ 85 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். மேலும், விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு கொறடா கோவி.செழியன், எம்பிக்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.