பல்மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு நாளை கலந்தாய்வு... அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்...

பல் மருத்துவ பட்ட மேற்படிப்பில் உள்ள 358 இடங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டதுடன் கலந்தாய்வு நாளை முதல் துவங்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பல்மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு நாளை கலந்தாய்வு... அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்...

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய நலவாழ்வு குழும ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்விற்கான ஆணை வழங்குதல் மற்றும் 2021-2022 ஆம் ஆண்டிற்கான பல்மருத்துவ பட்ட மேற்படிப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட் அமைச்சர் ஊதிய உயர்வு அரசாணையை பயணாளிகளுக்கு வழங்கினார்.
பின்னர் பல்மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான (MDS) தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இந்நிகழ்வில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ துறையில் ஒப்பந்த பணியாளர்களாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணிசெய்து வருவோர்களுக்கு ஊதிய உயர்வாக 28,100 பேருக்கு ஆணை வழங்கியதால் 89கோடி ரூபாய் அரசிற்குதீர்வுகளின் ஆண்டிற்கு கூடுதல் செலவாகிறது.

மத்திய அரசு தரவுகளின் படி தமிழகத்தில் 18 வயது நிரம்பிய தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் 5கோடியே78லட்சத்து91ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களில் 62% பேர் முதல் தவனை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் இறுதிக்குள் 70% பேருக்கு இலக்கு நிர்ணயம் செயய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 24லட்சம் 93ஆயிரம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர் அவர்களில் 10 லட்சம் பேர் இரண்டாம் தவனை செலுத்தியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1கோடியே 23லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் சுமார் 14லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர். நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் சுமார் 25லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த கையிருப்பு உள்ளது.

2021-2022 ஆம் ஆண்டிற்கான பல்மருத்துவ பட்ட மேற்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 358இடங்களில் தனியார் கல்லூரியில்296 இடங்களும், அரசு கல்லூரியில் 62 இடங்களும் உள்ளது. அதற்காக 1018 விண்ணப்பம் பெறப்பட்டுள்ளதில் 964தகுதியானவை என கண்டறியப்பட்டது. அதற்கான கலந்தாய்வு நாளை (3-10-21)துவங்கி நடைபெறும் என்றார்.

திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 4 புதிய மருத்துவ கல்லூரிகள் இந்த ஆண்டே செயல்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது இது தொடர்பாக மத்திய சுகாதார துறையை திங்கட்கிழமை நேரில் சந்தித்து தேவையான ஆவணங்களை வழங்க உள்ளோம் என்றார்.

பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 100 மருத்துவ இடங்கள் வழங்கியுள்ள இடங்களில் 150 இடங்களாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்க உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.