சாதனை படைத்துள்ள புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்கள்... மா.சு. ஹேப்பி!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து  மாற்றுத்திறனாளிகளுக்கும் அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

சாதனை படைத்துள்ள புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்கள்... மா.சு. ஹேப்பி!

சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் குடலிறக்க சிகிச்சை முறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

6 கோடி பேருக்கு 12 கோடி தடுப்பூசி செலுத்த வேண்டும் தற்போது மிக விரைவில் 3 கோடி அளவில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற அளவில் விரைந்து தடுப்பூசி செலுத்தி வருகிறோம். அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து  மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 60 கிரமங்களில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல் நகராட்சியில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசுகளுக்கு 75% லிருந்து 90 % தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீதத்திலிருந்து 10% தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை சி.எஸ்.ஆர். நிதியுதவி மூலம் இலவசமாக இரண்டாம் தவனை செலுத்து வேண்டிய பொதுமக்களுக்கு செலுத்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் முன்வர வேண்டும் என்றார்.