RSS பேரணி: உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

RSS பேரணி: உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கக்கோரிய வழக்கில், பேரணிக்கு காவல்துறையினர் தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.

இதையும் படிக்க : விதியை மீறிய விக்ரமன்... விளக்கமளிப்பாரா?!!

அதனைத்தொடர்ந்து மார்ச் 5ஆம் தேதி அணிவகுப்பிற்கு அனுமதி தர கோரி டிஜிபிக்கு ஆர்எஸ்எஸ் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் விரைவாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.