சென்னையின் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய மழை

சென்னையின் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையின் பல்வேறு இடங்களில்  வெளுத்து வாங்கிய மழை

சென்னையின் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக டெல்டா மாவட்டம் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், சென்னை மாநகரின் சில இடங்களில் மழை பெய்தது. எழும்பூர், அண்ணாசாலை, காமராஜர் சாலை, அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் 2 மணி நேரமாக மழை வெளுத்து வாங்கியது.

சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், பேருந்து நிழற்குடைகள் மற்றும் மேம்பாலத்தின் கீழே வாகன ஓட்டிகள் தஞ்சம் அடைந்தனர். மழை சிறிது விட்ட பிறகு, தங்கள் வீடுகளுக்கு சென்றனர். 10 நாட்களுக்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.