ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையும் கொன்று குவித்த ராஜபக்சே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்..... தொல். திருமாவளவன்

ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையும் கொன்று குவித்த ராஜபக்சே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும், அதை விடுத்து விமான நிலையத்தை திறக்க வைத்திருப்பது கண்டனத்துக்குரியது என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையும் கொன்று குவித்த ராஜபக்சே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்..... தொல். திருமாவளவன்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில்,

ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையும் கொன்று குவித்த ராஜபக்சே அவரைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டுமென தமிழினம் போராடிக் கொண்டிருக்கிறது என்றார்.

உலகம் தழுவிய அளவில் மனித உரிமை ஆர்வலர்களும், தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கை உள்ளவர்களும், ராஜபக்சேவை உரிய முறையில் விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்திய ஒன்றிய அரசு சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்து உத்தரபிரதேச விமான நிலையத்தை திறக்க வைத்து இருப்பது கண்டனத்துக்குரியது என்றும் மத்திய ஒன்றிய அரசின் இத்தகைய செயலை விடுதலை சிறுத்தை கட்சி கண்டிக்கிறது என கூறினார்.

தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது சோதனை நடத்துவது குறித்த கேள்விக்கு, விசாரணையில் உண்மை தெரியவரும் உண்மையில் அவர்கள் குற்றம் ஏதும் செய்யவில்லையெனில் அவர்களை சட்டம்  எதுவும் செய்யாது என்றார்.

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கு முழுமையாக மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறினார்.