ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ராபர்ட் பயாஸ்-க்கு சிகிச்சை...!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ராபர்ட் பயாஸ்-க்கு சிகிச்சை...!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு சிறப்பு முகாமில் உள்ள ராபர்ட் பயசுக்கு உடல்நலகுறைவு :  

Trichy Collector Denies that 4 rajiv gandhi convicts hunger strike in  Special camp | ராஜீவ் காந்தி வழக்கு விடுதலையானவர்கள் உண்ணாவிரதமா இன்னும்  சிறைப்பறவைகளாக நால்வர் | Tamil Nadu ...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில்,  ராபர்ட் பயாஸ்-க்கு ரத்த அழுத்தம் காரணமாக திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க   | " மதவெறுப்பு கொடுஞ்செயல்கள் தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கியிருப்பது வெட்கக்கேடானது " - சீமான்.

நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சிறப்பு முகாமில் உள்ள ராபர்ட் பயாசுக்கு இன்று காலை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

அதிக ரத்த அழுத்தம் காரணமாக திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சிறப்பு முகாமிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையும் படிக்க   | "கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து : - மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் " - அன்புமணி ராமதாஸ் .