ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்...!சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள்...!!

ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்...!சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள்...!!

சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிறை தெரிந்ததை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது .

சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிறை தெரிந்ததை தொடர்ந்து ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மஸ்ஜிதுல் அஸ்ரப் பள்ளி புதுத் தெருவில் திரளான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பஜார் திடலில் மேலப்பாளையம் தக்வா ஜமாஅத், மற்றும் ஹிஜ்ரி கமிட்டி ஆப் இந்தியா சார்பில் சிறப்பு  தொழுகை நடைபெற்றது. இதில், திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை செய்தனர். 

இதையும் படிக்க : முதலமைச்சர், அமைச்சர், சூப்பர்ஸ்டார்... ட்விட்டர் கணக்கின் ப்ளூ டிக் நீக்கம்...எலான் மஸ்க் அதிரடி!

இதேப்போன்று தென்காசியிலுள்ள மஸ்ஜிதூர் ரஹ்மான் ஜும்மா பள்ளிவாசல் ஜமாத் சார்பில்  முஸ்தபியா நடுநிலைப் பள்ளி மைதானத்தில் வைத்து நோன்பு பெருநாள் சிறப்புத் தொழுகை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர். மேலும்,  ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

இதேப்போல், கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள ஆயிஷா மஹால் திடலில் ஜாக் கமிட்டி சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. மேலும், ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.