அண்ணாமலை தயார் என்றால் நானும் விவாதிக்கத் தயார் - பொன்முடி

அண்ணாமலை தயார் என்றால் நானும் விவாதிக்கத் தயார் - பொன்முடி

மும்மொழிக்கொள்கை குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையுடன் விவாதிக்க தயார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 


விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து அமைச்சர் பொன்முடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். 

இதையும் படிக்க : அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் வீடுகளில் சோதனை...பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, பாஜகவினருக்கு தமிழ் மொழி மீது அக்கறை இல்லை என்றும், எதுவானாலும் அரசியல் செய்ய நினைப்பதாகவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், மும்மொழிக்கொள்கை குறித்து நேரிடையாக விவாதிக்க பாஜக தலைவர் அண்ணாமலை தயார் என்றால், நானும் விவாதிக்க தயார் என்று பொன்முடி தெரிவித்தார்