நாடாளுமன்ற தேர்தலே வந்தாலும் சந்திக்க தயார்...அமைச்சர் பேச்சு!

நாடாளுமன்ற தேர்தலே வந்தாலும் சந்திக்க தயார்...அமைச்சர் பேச்சு!

நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க திமுக தயாராக இருப்பதாக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார்.

வெற்றிக்காக பாடுபடுவோம் :

நெல்லை நகரில் நடைபெற்ற திமுக மாநகர அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ராஜ கண்ணப்பன். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவோம், மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம் என்று அமைச்சர் தெரிவித்தார். அதேபோல், நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க திமுக தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிக்க : ஆளுநரின் தேநீர் விருந்து...புறக்கணித்த கூட்டணி கட்சிகள்...பங்கேற்ற முதலமைச்சர்...!

தொடர்ந்து பேசிய அமைச்சர், அதிமுக கூட்டணி கட்சியில் பெரும் குழப்பம் உள்ளது. அதனால் தான் அவர்கள் வேட்பாளர் அறிவிப்பதில் இவ்வளவு தாமதம் ஏற்படுவதாக  அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சித்தார்.