புறம்போக்கு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்..! பொதுப்பணித்துறை அதிரடி..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ் கொடுங்காலூர் பெரிய ஏரி புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமிப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.

புறம்போக்கு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்..! பொதுப்பணித்துறை அதிரடி..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ் கொடுங்காலூர், பெரிய ஏரியின் புறம்போக்கு பகுதியில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து பலர் வீடுகளை கட்டி வாழ்ந்து வந்தனர்.

மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு படி, கீழ் கொடுங்கலூர் பெரிய ஏரியின் புறம்போக்கு பகுதியில் உள்ள 42 வீடுகள்,18 கடைகள், 3 கோயில்கள் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பை அகற்றிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் பல முறை இடிப்பதற்கு அறிவிப்பு நோட்டிஸ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஏராளமான போலீசார் உதவியுடன், வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர், மின்வாரிய ஊழியர்கள், 4 பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்றினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.