தென்னை மரத்தில் ஏறி விட்டு இறங்க முடியாமல் தவித்த முதியவர் மீட்பு  

போடி அருகே தென்னை மரத்தில் ஏறி விட்டு இறங்க முடியாமல் தவித்த முதியவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்

தென்னை மரத்தில் ஏறி விட்டு இறங்க முடியாமல் தவித்த முதியவர் மீட்பு   

போடி அருகே தென்னை மரத்தில் ஏறி விட்டு இறங்க முடியாமல் தவித்த முதியவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தேனி மாவட்டம் போடி அருகே பொட்டல்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் பெருமாள்.  தென்னை மரம் ஏறி தேங்காய்  பறிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இவர், வழக்கம்போல்  பொட்டல்களம் கிராமத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க சென்றுள்ளார்.

இந்நிலையில் மரத்தில் ஏறிய முதியவர் பெருமாளுக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு கீழே இறங்க முடியாமல் மரத்திலயே தவித்து வந்துள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு முதியவரை ஏணி வழியாக பத்திரமாக மீட்டனர்.